சமீபத்தில் முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செல்பேசியில் நம் தமிழ் இலக்கியத்தை படிக்க முடியும் என்றவுடன் அவர் அதை நம்பவில்லை. அவருடைய செல்பேசியிலேயே திருக்குறளை மாற்றி தந்தவுடன் வியப்பு மேலிட அதை பார்த்தார். அன்று இரவு சுமார் 11 மணிக்கு என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்டு செல்பேசி புத்தகத்தை பற்றி விரிவாக கேட்டறிந்தார். மொபைல்வேதா பற்றி முழுவதும் கூறினேன். நாங்கள் கடந்து வந்த பாதையையும், மேலும் எங்களுடைய இலக்கு பற்றியும் கூறினேன்.
ஒரு வாரம் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் மொபைல்வேதா பற்றியும் செல்பேசியில் தமிழ் இலக்கியம் பற்றியும் கூறினார். எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் என்னுடன் உரையாடியது குறைவான நேரமே விபரங்களை சரியாக கிரகித்து அருமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை சரியாக புரிந்துக்கொண்டு உஊக்குவித்தமைக்கு ....
.....கா. கதிரேசன் ....
Download As PDF
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment